world

img

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 115ஆக உயர்வு  

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.  

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் கடந்த திங்கட்கிழமை 'மேகி’ என பெயரிடப்பட்ட சூறாவளி தாக்கியது. இதனால், பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. நகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதி துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, அந்நாட்டின் லெய்டி மாகாணம் பேபே நகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வெள்ளம், நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில்  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

;